தாளிச்சா
தேவையான பொருட்கள்:
- ஆட்டுக்கறி எலும்போடு - அரை கிலோ
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசைக்கரண்டி
- துவரம்பருப்பு - ஒரு கப்
- தக்காளி - 2
- பெரிய வெங்காயம் - ஒன்று
- பச்சை மிளகாய் - 3
- கத்திரிக்காய் சின்னதானால் - 2
- உருளைக்கிழங்கு - 2
- கேரட் - ஒன்று
- மாங்காய் - ஒன்று
- வாழைக்காய் - ஒன்று
- எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
- பட்டை - 2 துண்டு
- கிராம்பு - 4
- மிளகாய்பொடி - 2 தேக்கரண்டி
- சீரகப்பொடி - ஒரு தேக்கரண்டி
- மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
- மிளகுப்பொடி - அரை தேக்கரண்டி
- கரம் மசாலாப்பொடி - ஒரு தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- அரைத்த தேங்காய் விழுது - ஒரு மேசைக்கரண்டி
செய்முறை:
- முதலில் இறைச்சியை கழுவி அதில் பாதி இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் மிளகாய்பொடி தவிர்த்து, அனைத்து மசாலாப்பொடி, உப்பு போட்டு பிசறி வைக்கவும்.
- பின்பு வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும். தக்காளியை எட்டாக வெட்டி வைக்கவும். மல்லி புதினாவை ஆய்ந்து கழுவி வைக்கவும்.
- துவரம் பருப்பை கழுவி 2 கப் தண்ணீர்விட்டு குக்கரில் 4 நிமிடங்கள் வேகவைத்து தனியே எடுத்து வைக்கவும். புளியை சுடுத்தண்ணீரில் ஊற வைக்கவும்.
- தேங்காயை மசிய அரைத்துக் கொள்ளவும். பின்பு குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு சிவந்ததும் அதில் வெங்காயத்தைப்போட்டு சுருள வதக்கவும்.
- கலர் மாறும் தருவாயில் பச்சை மிளகாய், தக்காளி போட்டு வதக்கவும். பின்பு மிளகாய்தூள் போட்டு கிளறவும்.
- மேலும் அதில் மீதமுள்ள இஞ்சி பூண்டைப்போட்டு பச்சை வாசனை போகும் வரை கிளறி, அதில் மல்லி புதினாவை போடவும்.
- அதில் பிசறி வைத்திருக்கும் கறியை போட்டு நன்றாக கிளறி அதில் இறைச்சி மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு உப்பு தேவையானால் போட்டு குக்கரை மூடி இறைச்சி நன்றாக வேகும்அளவு வெயிட் போட்டு வேகவிடவும்.
- வேகும் நேரத்தில் காய்கறிகளை கத்திரிக்காய், உருளை, வாழைக்காய், மாங்காய் ஆகியவற்றை 2 அங்குல துண்டங்களாக நறுக்கி வைக்கவும்.
- கேரட்டை வட்டமாக நறுக்கி வைக்கவும். புளியை கரைத்து வைக்கவும்.
- இறைச்சி வெந்த பின்பு மாங்காய் தவிர்த்து அனைத்து காய்களையும் குழம்பில் போட்டு வேகவிடவும்.
- முக்கால் பாகம் வெந்து வரும் போது அதில் மாங்காயை போடவும். பாதி வெந்திருக்கும் நிலையில் கரைத்து வைத்துள்ள புளி மற்றும் வேக வைத்த துவரம் பருப்பு, தேங்காய் விழுது ஆகியவற்றை குழம்பில் விடவும் மேலும் கறிவேப்பிலையை கொத்தாக போடவும்.
- தீயை மிதமாக்கி கொதிக்கவிடவும். காய் மற்றும் புளி, பருப்பு சேர்த்தவுடன் உப்பு போதுமானதாக இருக்காது. மீண்டும் உப்பு சரி பார்த்து தேவையானால் சேர்க்கவும். குழம்பு கொதித்தவுடன் இறக்கவும்.

0 comments:
Post a Comment