பிரி கிச்சடி
தேவையான பொருட்கள்:
- பாசிபருப்பு - அரை கப்
- பீன்ஸ், காரட், பட்டாணி கலவை - ஒரு கப்
- பாஸ்மதி அரிசி - ஒரு கப்
- வெங்காயம் - ஒன்று
- பச்சை மிளகாய் - 2 (காரத்திற்கு ஏற்ப சேர்க்கலாம்)
- பூண்டு - 5 பல்
- நெய் - 3 மேசைக்கரண்டி
- பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ - தலா 2
- பிரிஞ்சி இலை - 2
- கொத்தமல்லி - சிறிதளவு
- உப்பு - தேவைக்கு ஏற்ப
செய்முறை:
முதலில் பாஸ்மதி அரிசியை கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் நீளவாக்கில் நறுக்கவும்.
பின்பு குக்கரில் நெய் ஊற்றி சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரிஞ்சி இலை சேர்க்கவும்
அவை பொரிந்து வரும் போது வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின்பு காய் கலவை சேர்த்து லேசாக வதக்கவும். அதன் பிறகு பாசிபருப்பு சேர்த்து கிளறவும்.
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, தண்ணீர் கொதிக்கும் போது உப்பு, அரிசி சேர்க்கவும்.
கொதி நன்கு வரும் போது கொத்தமல்லி தழை சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
ஆவி அடங்கியதும் திறந்து பார்த்தால் புலாவ் தயாராகி விடும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்
சுவையான பிரிகிச்சடி ரெடி. தயிர் பச்சடி, தர்காரீ, டல்மா, கிரேவியுடன் சாப்பிட அருமையாக இருக்கும். அனைவரும் சாப்பிட கூடியது மிகவும் சத்தானது.

0 comments:
Post a Comment