தேவையான பொருட்கள்:
- ஷோலா சன்னா- கால் கப்
- ராஜ்மா - கால் கப்
- இஞ்சி பூண்டு விழுது- 3 ஸ்பூன்
- வர மிளகாய்-2
- வெங்காயம்-2
- தக்காளி-2
- தனியா தூள்- 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் -கால்ஸ்பூன்
- மிளகாய் தூள்- 1/2 ஸ்பூன்
- கரம் மசாலா- 1/2 ஸ்பூன்
- சன்னா மசாலா- 1 ஸ்பூன்
- ஓமம்- கால்ஸ்பூன்
- சீரகம்-கால்ஸ்பூன்
- காய்ந்த மாதுளைவிதை (anarthana)- கால் ஸ்பூன்
- கொத்தமல்லி- சிறிதளவு
செய்முறை:
- ஷோலா சன்னாவையும், ராஜ்மாவையும் 8 மணி நேரம் ஊற விடவும். பின் குக்கரில் வேக வைக்கவும்.
- தூள் வகைகளை நீரில் கலந்து விழுது போல் செய்து கொள்ளவும்
- தக்காளியையும் வெங்காயத்தையும் நன்கு பொடியாய் நறுக்கவும் (பாதியாய் அரைத்தது போல்)
- ஓமம்,அனர்தனா, சீரகம் மூன்றையும் எண்ணெய் இல்லாமல் வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்
- வாணலியில் எண்ணெய்விட்டு வரமிளகாய் சேர்க்கவும்
- பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்
- பின்னர் வெங்காயம்,தக்காளி சேர்த்து கிளறவும்
- அதில் மசாலா விழுது மற்றும் உப்பு சேர்த்து எண்ணெய் பிரிய வதக்கவும்
- பின் சன்னா வகைகளை வேக வைத்த நீருடன் சேர்த்து கொதிக்க விடவும்
- பின் அரைத்த பொடி சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து கொத்தமல்லி தூவி இறக்கவும்


0 comments:
Post a Comment