Thursday, June 22, 2017

இதுதான் எங்கள் உணவு.....11


மக்காச் சோளத்தில் கிச்சடி,(எண்ணெய் சேர்க்காதது)

துத்திக் கீரை பருப்பு சட்டினி




சோளம்  பயன்கள்:


வைட்டமின் பி 12 குறைபாடு, பேஃலிக் ஆசிட் சத்து குறைபாட்டால் ஏற்படும் இரும்புசத்து, ரத்த சோகை பிரச்சனையை போக்கும் தன்மை கொண்டது சோளம்.
காய்கறி கடைகளில் இலையுடன் கூடி சோளம் காணப்படும். இது தானிய வகையைச் சார்ந்தது. வெள்ளை, மஞ்சள் என இருந்த சோளம் இன்று பல நிறங்களில் கிடைக்கின்றது.
சோளத்திற்கு சுவை அதிகம். நார்சத்து அதிகம். கொழுப்பு சத்து குறைவு. மேலும் பல சத்துக்கள் கொண்டது.
* நார்சத்து மிகுதியின் காரணமாக ஜீரணத்திற்கு உகந்தது. கொழுப்பு சத்து ரத்தத்தில் சேரவிடாமல் தடுக்கின்றது. மலச்சிக்கல் நீக்குகின்றது. சில குடல் நோய் பாதிப்புகள் தவிர்க்கப்படுகின்றன. பைல்ஸ் பாதிப்பு தடுக்கப்படுகின்றது. மலச்சிக்கல் இராது.
* வைட்டமின் பி 12 குறைபாடும்,பேஃலிக் ஆசிட் சத்து குறைபாடும் ரத்தசோகையை ஏற்படுத்தும். இரும்புசத்து குறைபாடும் ரத்த சோகையினை ஏற்படுத்தும். சோளம் இவற்றினைத் தவிர்க்கும்.
* அதிக கார்போஹைடிரேட் கொண்டதினால் சோளம் நிறைந்த சக்தியினை அளிக்கின்றது. மூளை, நரம்பு மண்டலம் நன்கு செயல்பட உதவுகின்றது. விளையாட்டு வீரர்களுக்கு ஏற்ற உணவாக சோள வகை உணவுகள் கருதப்படுகிறது.
* கெட்ட கொழுப்பினை நீக்குகின்றது. வைட்டமின் ‘சி’ சத்து மிகுந்தது.
* எடை குறைந்தவர்கள் இதனை உட்கொள்ள எடை கூடுவர்.
* நார்சத்து மிகுதியின் காரணமாக சர்க்கரை நோய் தவிர்க்கப்படும். சர்க்கரை நோய் பிரிவு 2 நோயாளிகள் இதனை சிறிதளவு எடுத்துக் கொள்ள சர்க்கரை ஏற்ற இறக்கங்கள் கட்டுப்படும்.
* தசை, தசை நார்கள் வலுப்படும்.
* கண் பார்வை தேய்மானம் வெகுவாய் குறையும். கண் பார்வை அதிகரிக்கும்.
* கல்லீரல் மார்பக புற்றுநோய் தவிர்க்கப்படுகின்றது.
* கர்ப்ப காலத்தில் சிறந்த உணவு.
* ஒமேகா 3 ஆசிட் கொண்டதால் இருதய பாதுகாப்பாகின்றது. வாதம், மாரடைப்பு வராமல் தடுக்க உதவுகின்றது.
* லிட்டர் கரோடின் உள்ளதால் சருமம் நன்றாக இருக்கும்.
* முடி வளர்ச்சி உறுதியாகி நன்றாக இருக்கும்.
* முடி வறட்சி இராது.
* எலும்புகள் வலுவாகின்றன.
* சிவப்பு ரத்த அணுக்கள் உருவாக உதவுகின்றன.
சோளம் கொண்டு அதிக தென்னிந்திய உணவு வகைகளை தயாரிப்பது எளிது.

துத்திக் கீரை - பயன்கள்

1. துத்திக் கீரையைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்துச் சாறு எடுத்துசர்க்கரைமற்றும் பசும் பால் சேர்த்துக் குடித்தால் ஆசனவாய்க் கடுப்பு நீங்கும்.

2. 
துத்திக் கீரையை சட்டியில் போட்டு ஆமணக்கு எண்ணெய் ஊற்றி வதக்கி,ஆசனவாயிலில் வைத்துக் கட்டினால் மூல நோய் குணமாகும். 

3. 
துத்திக் கீரைச் சாற்றை பசும்பாலில் கலந்து காலையில் வெறும் வயிற்றில்குடித்தால் மூல நோய் குணமாகும்.

4. 
பால் துத்தி இலையைப் பசும்பாலில் நனைத்து ஆசனவாயிலில்வைத்துக்கட்டினால் மூலச்சூடு மறையும்.

இயற்க்கை முறையில் ,ஆரோக்கியத்துடன் ,PALEO FOOD


நாங்கள் அன்றாடம் இயற்கையான மற்றும் தீங்கற்ற நல்லுணவுகளை சுவையாகவும் மலிவாகவும் விளைவித்தும் தயாரித்தும் உண்டு வாழ்கிறோம்! அதை முன்னுதாரணமாகக் கொண்டு மற்றவர்களும் உண்டு பயன்பெற்று நல்வாழ்வு வாழ விரும்புகிறோம். இது மிகப் பெரும் பட்டியலாக நீண்டுகொண்டே இருக்கும்.....




இயற்க்கை முறையில் எளிதாக தயாரித்து உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம் என்று செய்முறை விளக்கம் அளித்தSubash Krishnasamy ஐயா இதை உங்களுக்கு தயாரித்து கொடுத்த அம்மாவிற்க்கும் நன்றிகள் ஐயா.

0 comments:

Post a Comment

Like Us Facebook

Categories

Unordered List

Sample Text

Blog Archive

Subscribe Via Email

Sign up for our newsletter, and well send you news and tutorials on web design, coding, business, and more! You'll also receive these great gifts:

Blog Archive

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Social Icons

Pages

BTemplates.com

Popular Posts

Popular Posts

Slider[Style1]

Find Us On Facebook

About us

Video Of Day

Popular Posts

Recent Posts

Text Widget