Tuesday, June 27, 2017

இதுதான் எங்கள் உணவு.....15

கோவைக் கீரைக் கடையல், சிவப்புத் தண்டங்கீரைப் பொரியல்




கோவைக் கீரைக் கடையல், சிவப்புத் தண்டங்கீரைப் பொரியல்இயற்க்கை முறையில் ,ஆரோக்கியத்துடன் ,PALEO FOOD


நாங்கள் அன்றாடம் இயற்கையான மற்றும் தீங்கற்ற நல்லுணவுகளை சுவையாகவும் மலிவாகவும் விளைவித்தும் தயாரித்தும் உண்டு வாழ்கிறோம்! அதை முன்னுதாரணமாகக் கொண்டு மற்றவர்களும் உண்டு பயன்பெற்று நல்வாழ்வு வாழ விரும்புகிறோம். இது மிகப் பெரும் பட்டியலாக நீண்டுகொண்டே இருக்கும்.....


இயற்க்கை முறையில் எளிதாக தயாரித்து உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம் என்று செய்முறை விளக்கம் அளித்தSubash Krishnasamy ஐயா இதை உங்களுக்கு தயாரித்து கொடுத்த அம்மாவிற்க்கும் நன்றிகள் ஐயா.


இதுதான் எங்கள் உணவு.....14

நெல்லிக்காய் ஜூஸ்








மனிதனுக்கு எளிதில் கிடைக்குமாறு இயற்கை அளித்த ஓர் மருத்துவ குணமிக்க ஓர் உணவுப் பொருள் தான் நெல்லிக்காய். 


இந்த நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் பல பிரச்சனைகளை குணப்படுத்த கொடுக்கப்படுகிறது.
உங்களுக்கு எந்த ஒரு உடல்நல பிரச்சசனையும் இல்லாமல், உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று நினைத்தால், நெல்லிக்காய் ஜூஸை தினமும் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள்.
கொழுப்புக்கள் கரையும்:
நெல்லிக்காய் உடலில் புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, கொழுப்புக்களைக் குறைத்து, உடல் பருமனை தடுக்கும். எனவே உங்களுக்கு உடல் எடையைக் குறைக்கும் எண்ணம் இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் நெல்லிக்காய் ஜூஸை குடித்து வாருங்கள்.
எலும்புகள் ஆரோக்கியமாகும்:
எலும்பு உறிஞ்சிகள் ஒரு வகையான செல்கள். இலை எலும்புகளை எளிதில் உடையச் செய்யும். ஆனால் நெல்லிக்காய் ஜூஸை தினமும் பருகினால், இந்த செல்களின் அளவு குறைந்து, எலும்புகளின் ஆரோக்கியமும் மேம்படும்.
புற்றுநோய்:
நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. முக்கியமாக இதில் சூப்பராக்ஸைடு டிஸ்முடேஸ் (SOD) என்னும் உட்பொருள் உள்ளது. இது ப்ரீ-ராடிக்கல்களிடமிருந்து பாதுகாப்பளித்து, புற்றுநோயில் இருந்து நம்மைத் தடுக்கும். எனவே புற்றுநோய் வராமலிருக்க வேண்டுமானால், நெல்லிக்காய் ஜூஸை பருகுங்கள்.
உடல் சூடு தணியும்:
நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். குறிப்பாக கோடையில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது, உடல் சூட்டைத் தணிக்கும்.
இரத்தம் சுத்தமாகும்:
நெல்லிக்காய் உடலில் உள்ள டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றி, உடலையும், இரத்தத்தையும் சுத்தம் செய்யும். மேலும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் இரத்தணுக்களின் அளவு அதிகரிக்கும்.
சரும அழகு மேம்படும்:

முக்கியமாக நெல்லிக்காய் ஜூஸை தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் சி சரும செல்களுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். சரும செல்கள் ஆரோக்கியமாக இருந்தால், சரும அழகு தானாக அதிகரிக்கும்.



நெல்லிக்காய் ஜூஸ் இயற்க்கை முறையில் ,ஆரோக்கியத்துடன் ,PALEO FOOD


நாங்கள் அன்றாடம் இயற்கையான மற்றும் தீங்கற்ற நல்லுணவுகளை சுவையாகவும் மலிவாகவும் விளைவித்தும் தயாரித்தும் உண்டு வாழ்கிறோம்! அதை முன்னுதாரணமாகக் கொண்டு மற்றவர்களும் உண்டு பயன்பெற்று நல்வாழ்வு வாழ விரும்புகிறோம். இது மிகப் பெரும் பட்டியலாக நீண்டுகொண்டே இருக்கும்.....




இயற்க்கை முறையில் எளிதாக தயாரித்து உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம் என்று செய்முறை விளக்கம் அளித்தSubash Krishnasamy ஐயா இதை உங்களுக்கு தயாரித்து கொடுத்த அம்மாவிற்க்கும் நன்றிகள் ஐயா.
இதுதான் எங்கள் உணவு.....13


சோற்றுக் கற்றாழை, தேங்காய்த் துருவல், இனிப்புக் கலவை





சோற்றுக் கற்றாழை, தேங்காய்த் துருவல், இனிப்புக் கலவை இயற்க்கை முறையில் ,ஆரோக்கியத்துடன் ,PALEO FOOD



நாங்கள் அன்றாடம் இயற்கையான மற்றும் தீங்கற்ற நல்லுணவுகளை சுவையாகவும் மலிவாகவும் விளைவித்தும் தயாரித்தும் உண்டு வாழ்கிறோம்! அதை முன்னுதாரணமாகக் கொண்டு மற்றவர்களும் உண்டு பயன்பெற்று நல்வாழ்வு வாழ விரும்புகிறோம். இது மிகப் பெரும் பட்டியலாக நீண்டுகொண்டே இருக்கும்.....



இயற்க்கை முறையில் எளிதாக தயாரித்து உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம் என்று செய்முறை விளக்கம் அளித்தSubash Krishnasamy ஐயா இதை உங்களுக்கு தயாரித்து கொடுத்த அம்மாவிற்க்கும் நன்றிகள் ஐயா.

Saturday, June 24, 2017

     இதுதான் எங்கள் உணவு.....12


  தினை அரிசியில் சாம்பார் சாதம்,வெங்காயத் தயிர் 

பச்சடி




தினை அரிசி பயன்கள்:

சிறு தானிய வகைகளில் ஒன்றுதான் தினை என்றும் அழைக்கப்படுகிறது. தொன்றுதொட்டு, மக்களால் அதிகளவில் விரும்பி, வரவேற்கப்பட்ட பலவகையான மூலிகைகள் நாட்கள் செல்லச் செல்ல தெய்வீக முக்கியத்துவம் பெற்றதாக வரலாறு கூறுகின்றது.தமிழகத்தின் பல கோயில்களில் பலவகையான மரங்கள் தரவிருட்சமாக வணங்கப்படுகிறது.

உண்மையில், இவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு அரிய பொக்கிஷமாகும். மூலிகை மரங்களின் மருத்துவ குணங்களை அறிந்த அந்தக் காலத்திய மக்கள், அதன் பயன்களை பாமர மக்களும் அறிந்துகொள்ளும் பொருட்டு, அவற்றைப் புனிதமாக வணங்கப்படும் கோயில்களில் வளர்க்கத் தொடங்கினர்.

இதனால் அம்மரங்கள் தெய்வீக முக்கியத்துவத்துடன் போற்றி வளர்க்கப்பட்டது. நாளடைவில், இவை தெய்வீக மரங்களாக உருப்பெற்று, மக்கள் மத்தியில் ஆன்மீக அந்தஸ்துடன் போற்றப்படத் தொடங்கியது.பழங்காலத்தில் இருந்து உருவான இந்த தெய்வீக மரங்கள் பல கோயில்களில் சில முக்கியத்துவத்தின் தொடர்ச்சியாக, மரங்களை தலவிருட்சமாகக் கருதி மக்கள் வணங்குகின்றனர்.

இதன் மூலம் கொடிய நோய்களுக்கு நிவாரணம் கிடைப்பதாகவும் மக்கள் நம்புகின்றனர்.சின்னஞ்சிறு செடி கொடிகளை முதல் பெரிய பெரிய மரங்கள் வரை மருத்துவ குணங்கள் நிறைந்தவை. புனித மரங்களாக போற்றப்பட்டது. தானிய வகைகளில் தினையும் இவ்வாறு புனிதத்துவம் பெற்றது.

தினையின் வேறு பெயர்களாக இறடி, ஏனல், கங்கு என அழைக்கப்படுகிறது.

இது இந்தியாவில் பயிராகும் ஒருவகை உணவுப் பொருள் ஆகும். இனிப்புச் சுவை கொண்டது.

உடலை வலுவாக்கும், சிறுநீர்ப்பெருக்கும் தன்மைகள் உண்டு. இது மிகச்சூடு உள்ளது. வாயு நோயையும், கபத்தையும் போக்கும்.

ஆயினும் தீக்குற்றத்தைப் பெருக்கும். பசியை உண்டாக்கும் குணம் கொண்டது.

தினைமா - கஞ்சி - சாதம்

* தினையரிசி - உடலுக்கு வன்மையைக் கொடுக்கும். சாதம் - வலிமையைப் பெருக்கும், வாயுவைப் போக்கும், கஞ்சி - வீக்கங்களை ஒழிக்கும்.

* இதன் அரிசியைச் சிலர் சமைத்து உணவாகக் கொள்வர். இது வெப்பத்தை உண்டு பண்ணும். எனினும், உடலைக் காக்கும் தன்மையுடையது.

* இதன் கூழைப் பிள்ளை பெற்றவர்களுக்குக் கொடுக்கும் வழக்கம் நம் நாட்டில் இன்றும் உள்ளது.பண்டைக்காலத்திலிருந்தே தினை உணவு தானியமாக பயிரிடப்பட்டு வருகின்றது. இது ஐரோப்பாக் கண்டத்தில் கற்காலத்தில் அறிமுகமானாலும், கிழக்காசிய நாடுகளில் முக்கியமான சீனாவில் இருந்துதான் மற்ற இடங்களுக்குப் பரவியுள்ளது.

கி.மு. 2700களிலேயே சீனாவிலும் பின்னர் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்கும் பரவியதாகவும், பின்னர் இந்தியா, ஜப்பான், தென் அமெரிக்கா, வட அமெரிக்கா போன்ற இடங்களில் பயிரிடப்படுகின்றன.இந்தியாவில் மட்டும் ஆந்திரா, குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் மைசூர் போன்ற இடங்களில் தினை உணவு தானியமாக பயிரிடப்படுகிறது.

அமெரிக்கா, மத்திய ஐரோப்பாவில் தீவனப் பயிராகவும், வளர்க்கின்றனர். இது வறட்சியைத தாங்கும் பயிர். இதனை ஆண்டு முழுவதும் பயிரிடலாம் என்பது கூடுதல் தகவலாகும்.

சத்துக்கள்

ஈரப்பதம் - 11.2%
புரதம் - 12.3%
கொழுப்புச்சத்து - 4.3%
கனிமச்சத்து - 3.3%
நார்ச்சத்து - 8.0%
மாவுச்சத்து - 60.9%
எனவும் உமி 20% வரையிலுமாக உள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

புரதம்

தினையின் புரதம் கோதுமையின் புரதத்தின் அளவை ஒத்து இருந்தாலும் தரம் கோதுமையின் புரதத்தைவிடக் குறைவாகும்.

இருப்பினும் பயறு வகைகளைக் கலந்து உணவாக உட்கொள்ளும் பொழுது இந்தக் குறைபாடு நிவர்த்தியாகி விடுகின்றது.

இதனைத் தரம்பிரித்துப் பார்க்கும்போது அல்புமின் மற்றும் குளோபுலின் 13%, புரோலமின் 48%, குளுடலின் 37.0% உள்ளன. இதன் செரிப்புத் திறன் 77.0% ஆக உள்ளது.

மாவுச் சத்து

மாவுச்சத்து - 60%
ஸ்டார்ச்சு - 55%

சர்க்கரைசத்து - 2% வரை உள்ளன. ஸ்டார்ச்சின் குருனைகள் பல அமைப்புகளில் உள்ளன. சில வட்டமாகவும், சில முக்கோணமாகவும், சில எண்கோணத்திலும் உள்ளன.

கொழுப்புச் சத்து

தினையில் கொழுப்புச்சத்து 4.3 விழுக்காடு உள்ளது. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மஞ்சளாகவும், ஒளி ஊடுருவக் கூடியதாகவும் உள்ளது.

உமியிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெயில் பால் மிவுக், ஸ்டீரிக் என்ற நிறைவு பெற்ற கொழுப்பு அமிலங்கள் 10 சதம் வரையிலும் லினோலியரிக் அமிலம் 80% வரையிலும் ஒலியிக் அமிலம் 9% வரையிலும் உள்ளது.

கனிமச் சத்துக்கள்

இரும்புசத்தின் அளவு மற்ற தானியங்களைவிட குறிப்பாக அரிசியை,கோதுமை,ராகியைவிட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.கால்சியத்தின் அளவும் மற்ற தானியங்களை விட கொஞ்சம் அதிகமாக உள்ளது.

உயிர் சத்துக்கள்

தினை உயிர்ச்சத்துக்கள் அதிகம் கொண்ட தானியமாகும்.

தினையின் பயன்கள்

உமி நீக்கிய தினை உணவாகிறது. இதனை களியாகவும், கஞ்சியாகவும் செய்து சாப்பிடுகின்றனர். மாவாக அரைத்து சூடான பால் சேர்த்து, உடல் தளர்ச்சியடைந்தவர்களுக்குக் கொடுக்கின்றார்கள்.

பலநூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே இதனை முறுக்கு செய்யவும், தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்துள்ளனர். முளைக்க வைத்த தினையைப் பொரித்து சாப்பிடலாம்.

Thursday, June 22, 2017

இதுதான் எங்கள் உணவு.....11


மக்காச் சோளத்தில் கிச்சடி,(எண்ணெய் சேர்க்காதது)

துத்திக் கீரை பருப்பு சட்டினி




சோளம்  பயன்கள்:


வைட்டமின் பி 12 குறைபாடு, பேஃலிக் ஆசிட் சத்து குறைபாட்டால் ஏற்படும் இரும்புசத்து, ரத்த சோகை பிரச்சனையை போக்கும் தன்மை கொண்டது சோளம்.
காய்கறி கடைகளில் இலையுடன் கூடி சோளம் காணப்படும். இது தானிய வகையைச் சார்ந்தது. வெள்ளை, மஞ்சள் என இருந்த சோளம் இன்று பல நிறங்களில் கிடைக்கின்றது.
சோளத்திற்கு சுவை அதிகம். நார்சத்து அதிகம். கொழுப்பு சத்து குறைவு. மேலும் பல சத்துக்கள் கொண்டது.
* நார்சத்து மிகுதியின் காரணமாக ஜீரணத்திற்கு உகந்தது. கொழுப்பு சத்து ரத்தத்தில் சேரவிடாமல் தடுக்கின்றது. மலச்சிக்கல் நீக்குகின்றது. சில குடல் நோய் பாதிப்புகள் தவிர்க்கப்படுகின்றன. பைல்ஸ் பாதிப்பு தடுக்கப்படுகின்றது. மலச்சிக்கல் இராது.
* வைட்டமின் பி 12 குறைபாடும்,பேஃலிக் ஆசிட் சத்து குறைபாடும் ரத்தசோகையை ஏற்படுத்தும். இரும்புசத்து குறைபாடும் ரத்த சோகையினை ஏற்படுத்தும். சோளம் இவற்றினைத் தவிர்க்கும்.
* அதிக கார்போஹைடிரேட் கொண்டதினால் சோளம் நிறைந்த சக்தியினை அளிக்கின்றது. மூளை, நரம்பு மண்டலம் நன்கு செயல்பட உதவுகின்றது. விளையாட்டு வீரர்களுக்கு ஏற்ற உணவாக சோள வகை உணவுகள் கருதப்படுகிறது.
* கெட்ட கொழுப்பினை நீக்குகின்றது. வைட்டமின் ‘சி’ சத்து மிகுந்தது.
* எடை குறைந்தவர்கள் இதனை உட்கொள்ள எடை கூடுவர்.
* நார்சத்து மிகுதியின் காரணமாக சர்க்கரை நோய் தவிர்க்கப்படும். சர்க்கரை நோய் பிரிவு 2 நோயாளிகள் இதனை சிறிதளவு எடுத்துக் கொள்ள சர்க்கரை ஏற்ற இறக்கங்கள் கட்டுப்படும்.
* தசை, தசை நார்கள் வலுப்படும்.
* கண் பார்வை தேய்மானம் வெகுவாய் குறையும். கண் பார்வை அதிகரிக்கும்.
* கல்லீரல் மார்பக புற்றுநோய் தவிர்க்கப்படுகின்றது.
* கர்ப்ப காலத்தில் சிறந்த உணவு.
* ஒமேகா 3 ஆசிட் கொண்டதால் இருதய பாதுகாப்பாகின்றது. வாதம், மாரடைப்பு வராமல் தடுக்க உதவுகின்றது.
* லிட்டர் கரோடின் உள்ளதால் சருமம் நன்றாக இருக்கும்.
* முடி வளர்ச்சி உறுதியாகி நன்றாக இருக்கும்.
* முடி வறட்சி இராது.
* எலும்புகள் வலுவாகின்றன.
* சிவப்பு ரத்த அணுக்கள் உருவாக உதவுகின்றன.
சோளம் கொண்டு அதிக தென்னிந்திய உணவு வகைகளை தயாரிப்பது எளிது.

துத்திக் கீரை - பயன்கள்

1. துத்திக் கீரையைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்துச் சாறு எடுத்துசர்க்கரைமற்றும் பசும் பால் சேர்த்துக் குடித்தால் ஆசனவாய்க் கடுப்பு நீங்கும்.

2. 
துத்திக் கீரையை சட்டியில் போட்டு ஆமணக்கு எண்ணெய் ஊற்றி வதக்கி,ஆசனவாயிலில் வைத்துக் கட்டினால் மூல நோய் குணமாகும். 

3. 
துத்திக் கீரைச் சாற்றை பசும்பாலில் கலந்து காலையில் வெறும் வயிற்றில்குடித்தால் மூல நோய் குணமாகும்.

4. 
பால் துத்தி இலையைப் பசும்பாலில் நனைத்து ஆசனவாயிலில்வைத்துக்கட்டினால் மூலச்சூடு மறையும்.

இயற்க்கை முறையில் ,ஆரோக்கியத்துடன் ,PALEO FOOD


நாங்கள் அன்றாடம் இயற்கையான மற்றும் தீங்கற்ற நல்லுணவுகளை சுவையாகவும் மலிவாகவும் விளைவித்தும் தயாரித்தும் உண்டு வாழ்கிறோம்! அதை முன்னுதாரணமாகக் கொண்டு மற்றவர்களும் உண்டு பயன்பெற்று நல்வாழ்வு வாழ விரும்புகிறோம். இது மிகப் பெரும் பட்டியலாக நீண்டுகொண்டே இருக்கும்.....




இயற்க்கை முறையில் எளிதாக தயாரித்து உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம் என்று செய்முறை விளக்கம் அளித்தSubash Krishnasamy ஐயா இதை உங்களுக்கு தயாரித்து கொடுத்த அம்மாவிற்க்கும் நன்றிகள் ஐயா.

இதுதான் எங்கள் உணவு.....10


கோவை இலைச் சாறு




சிறிய கோவைக்காயில் பெரிய பலன்கள்:

புதர்களிலும் வீணாக கிடக்கும் இடங்களிலும் தானக வளரும் கோவைக்கொடியின் முழுத்தாவரமும் மருத்துவகுணம் கொண்டது. காய், கனிகள், இலைகள், தண்டு, வேர் போன்றவை மருத்துவ பயன் உடையவை. வெள்ளரிக்காய் குடும்பத்தை சேர்ந்த இந்த எளிமையான காய்கறி கொடியினத்தை சேர்ந்தது இந்தியாவில் எங்கும் கிடைக்கும். கனிகள் செந்நிறமுடையவை. இவற்றை மென்றால் நாக்கில் உள்ள புண்கள் ஆறும். இலைகள், தண்டு, வேர் ஆகிய பாகங்களில் இருந்து பிழிந்து எடுக்கப்பட்ட சாறு உலோகப் பொருட்களோடு கலந்து நீரிழிவு நோய், வீங்கிய சுரப்பிகள், தோல்நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்த உதவும். செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: க்ரிட்டோசாந்தின் லைக்கோப்பீன், தையாமின், ரிபோஃப் பாவின், நையாசின், அஸ்கார்பிக் அமிலம். குக்கர்பிட்டாசின், லுப்பியாஸ், லினோயிக் அமிலம் சைலோக்னுக்கான் போன்றவை காணப்படுகின்றன. நீரிழிவை கட்டுப்படுத்தும் கோவைக்காய் பழங்காலத்திலிருந்தே நீரிழிவு நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று. தீவிரமில்லாத சர்க்கரை வியாதிக்கு கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும். கோவைக்காய் சாறு எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகளும் அதிகம் ஏற்படுவதில்லை. பல வருடங்களுக்கு முன்பே, அமெரிக்க ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பள்ளியில் நடத்திய ஆய்வில் கோவைக்காய் நீரிழிவு வியாதியை குறைக்கும் குணமுடையது என்பது சொல்லப்பட்டது. நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் என்று பெங்களூரில் நடத்திய ஆராய்ச்சியிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம். வாய்ப்புண் குணமாகும் கோவைக்காய் பச்சடி சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு. சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய கோவைக்காயுடன் மோர், மிளகுப்பொடி, சீரகப்பொடி, இஞ்சி சிறிது சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து விட்டால் அவ்வளவுதான் கோவைக்காய் பச்சடி தயார். இதனை வாரம் இரண்டு நாள் பகல் உணவில் சேர்த்தால் வாய்ப்புண் குணமாகும். பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண் ஆறிடும். வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை சேர்த்துக்கலாம். ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம். தோல்நோய்களை குணமாக்கும் இலை மற்றும் தண்டு – கபத்தை வெளியேற்றும். வலி குறைக்கும். இலை, தண்டு, கஷாயம் மார்புச்சளி, சுவாசக்குழாய் அடைப்பு இவற்றிர்கு நல்ல மருந்தாகும். இலைகளை வெண்ணெயுடன் கலந்து புண்கள், பிற தோல்நோய்களை குணப்படுத்த உதவும். கோவைப்பழம் கபத்தை உண்டாக்கும். சீக்கிரத்தில் சீரணமாகாது. ஆனால் மூச்சு இரைத்தல், வாந்தி, வாய்வு ரத்த சோகை, பித்தம், காமாலை முதலான பிரச்சினைகளை குணப்படுத்தும். கடிகளால் ஏற்பட்ட காயங்களின் மீது கோவை இலையை அரைத்து வைத்துக் கட்டினால் புண் விரைவில் ஆறும். வயிற்றுப் பூச்சிகளை கட்டுப்படுத்தும் கோவைக்காய் பித்தம், ரத்தப் பெருக்கு, வாயு, வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றுக்கெல்லாம் முடிவு கட்டும் நல்ல மருந்தாகும். கோவை இலைச் சாறு, பித்தம், ஷயம், மூல நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன் படும். கரம் மசாலா அல்லது உஷ்ணத்தைத் தரும் மருந்துகள் கோவைக்காயால் ஏற்படும் தீமைகளுக்கு நல்ல மாற்றாகும்.

கோவை இலைச் சாறு இயற்க்கை முறையில் ,ஆரோக்கியத்துடன் ,PALEO FOOD


நாங்கள் அன்றாடம் இயற்கையான மற்றும் தீங்கற்ற நல்லுணவுகளை சுவையாகவும் மலிவாகவும் விளைவித்தும் தயாரித்தும் உண்டு வாழ்கிறோம்! அதை முன்னுதாரணமாகக் கொண்டு மற்றவர்களும் உண்டு பயன்பெற்று நல்வாழ்வு வாழ விரும்புகிறோம். இது மிகப் பெரும் பட்டியலாக நீண்டுகொண்டே இருக்கும்.....




இயற்க்கை முறையில் எளிதாக தயாரித்து உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம் என்று செய்முறை விளக்கம் அளித்தSubash Krishnasamy ஐயா இதை உங்களுக்கு தயாரித்து கொடுத்த அம்மாவிற்க்கும் நன்றிகள் ஐயா.

இதுதான் எங்கள் உணவு.....10


சாதம், கீரைக் கடையல், காய்கறி சேலட், பொரியல் 




                           இயற்க்கை முறையில் ,ஆரோக்கியத்துடன் ,PALEO FOOD


நாங்கள் அன்றாடம் இயற்கையான மற்றும் தீங்கற்ற நல்லுணவுகளை சுவையாகவும் மலிவாகவும் விளைவித்தும் தயாரித்தும் உண்டு வாழ்கிறோம்! அதை முன்னுதாரணமாகக் கொண்டு மற்றவர்களும் உண்டு பயன்பெற்று நல்வாழ்வு வாழ விரும்புகிறோம். இது மிகப் பெரும் பட்டியலாக நீண்டுகொண்டே இருக்கும்.....




இயற்க்கை முறையில் எளிதாக தயாரித்து உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம் என்று செய்முறை விளக்கம் அளித்தSubash Krishnasamy ஐயா இதை உங்களுக்கு தயாரித்து கொடுத்த அம்மாவிற்க்கும் நன்றிகள் ஐயா.


இதுதான் எங்கள் உணவு.....9


காய்கறி சேலட்...



கேரட், தக்காளி, பொரியல்தட்டை, வெங்காயம், பச்சைமிளகாய்த் துருவல், கறிவேப்பிலை, கொத்துமல்லி, எலுமிச்சைச் சாறு, உப்பு......இப்படிச் சேர்த்த கலவை.

காய்கறி சேலட் இயற்க்கை முறையில் ,ஆரோக்கியத்துடன் ,PALEO FOOD


நாங்கள் அன்றாடம் இயற்கையான மற்றும் தீங்கற்ற நல்லுணவுகளை சுவையாகவும் மலிவாகவும் விளைவித்தும் தயாரித்தும் உண்டு வாழ்கிறோம்! அதை முன்னுதாரணமாகக் கொண்டு மற்றவர்களும் உண்டு பயன்பெற்று நல்வாழ்வு வாழ விரும்புகிறோம். இது மிகப் பெரும் பட்டியலாக நீண்டுகொண்டே இருக்கும்.....




இயற்க்கை முறையில் எளிதாக தயாரித்து உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம் என்று செய்முறை விளக்கம் அளித்தSubash Krishnasamy ஐயா இதை உங்களுக்கு தயாரித்து கொடுத்த அம்மாவிற்க்கும் நன்றிகள் ஐயா.


இதுதான் எங்கள் உணவு.....8




சர்க்கரைப் பொங்கல், பேரீச்சம் பழம், முளைக் கட்டிய பாசிப் பயறு




பேரீச்சம் பழம் பயன்கள் :

பழங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் உண்ணலாம் நேரடியாகவும் அப்படியே உண்ணலாம், ஒருசில பழங்களை காயவைத்து பதப்படுத்தி உண்ணலாம். எப்படி உண்டாலும் அனைத்து பழங்களுமே இயற்கை நமக்களித்த வரப்பிரசாதம்.
ஒவ்வொரு பழத்திற்கும் ஒவ்வொரு மருத்துவக் குணம் உள்ளது. அவற்றில் வளைகுடா நாடுகளில் விளையும் பேரீச்சம்பழம் எண்ணற்ற பலன்கள் கொண்டது. இப்பழம் பெரியவர்கள், குழந்தைகள், அனைவரும் விரும்பி உண்ணும் பழம்.
சித்தா, ஆயுர்வேதா,யுனானி மருத்துவதிற்கு பேரீச்சம்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. சூரியனின் அனைத்து சக்திகளும் அடங்கியது பேரீச்சம் பழம். இந்த பழத்தில் உள்ளவிட்டமின்கள் ஏ, பி, பி2, பி5,E அத்துடன் கால்சியம்சத்துமற்றும் இரும்புச் சத்துநிறைந்துள்ளன.
குழந்தைகளின் ஊட்டச்சத்து:
பொதுவாக குழந்தைகள் சாப்பிட சற்று அடம்பிடிப்பார்கள். இன்னும் சிலர் எதைச் சாப்பிட்டாலும் உடல் தேறாமல் மெலிந்து சற்று பலஹீனமாக காணப்படுவார்கள். இவர்களுக்கு பேரீச்சம் பழத்தை தேனில் ஊறவைத்து காலை மாலை என இருவேளையும் கொடுத்து வந்தால் குழந்தையின் உடல் தேறி, வலுவுடனும், புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாகவும் காணப்படுவார்கள்.
பெண்களின் ஊட்டச்சத்து:
பொதுவாக பெண்களுக்கு கால்சியம் மற்றும் இரும்புசத்து அதிக தேவைப்படுகிறது. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் பலகினத்தை ஈடுகாட்டவும், மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம்பழம் மருந்தாகிறது.
மெனோபாஸ் காலகட்டத்தில் பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். அத்துடன் மூட்டு வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.
கண்கள்:
விட்டமின் ‘ஏ’ குறைபாட்டால் கண்பார்வை பாதிக்கும் . இதை நிவர்த்தி செய்ய பேரீச்சம் பழம் சிறந்த மருந்து. மாலைக் கண் நோயால் பாதிப் படைந்தவர்கள், பேரீச்சம் பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்குவதுடன் நம் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும்.
நரம்பு தளர்ச்சி:
கடின உழைப்பு, மன உளைச்சல், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக வேலைப்பளு, காரணமாக நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் பட்டவர்கள். இவர்களுக்கு பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நீங்கி, ஞாபக சக்தி கூடும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
முந்திரி பருப்புடன் சிறிது பேரீச்சம் பழம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து உண்டால் நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். அத்துடன் எலும்புகளை பலப்படுத்தும், இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்,இளைப்பு நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும்,காயங்கள் விரைவில் ஆறும், மூட்டு வலி நீங்கும்.
பசும்பாலுடன் பேரீச்ச பழம் விதையை நீக்கி சேர்த்து வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் குணமாகும். அத்துடன் ஜலதோஷம், இருமல் குணமடையும்.
சர்க்கரை நோயுடையவர்க்கு எலும்புகள் பலம் குறைந்து வரும். இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.கால்சியம் இரும்பு சத்து உடலில் அதிகரிக்கும். முதியோர்களுக்கு பேரீச்சம் பழம்மருந்தாக உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான பலவித இன்னல்களைக நீக்கும்.


முளை கட்டிய பயறு


100 கி முளை கட்டிய பயறில் உள்ள சத்து:

கலோரிஸ் .................- 30
புரதச்சத்து ................- 3 கி
கார்போஹைட்ரேட்... - 6கி
நார்ச் சத்து ................- 2 கி

முளை கட்டிய பயறு மிகவும் சத்தான ஒரு உணவு. மற்ற தானியம் போல முளை கட்டிய பயறு வகை வாயுத்தன்மை இல்லாதவை. ஆகவே இது நோயாளிகளுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்ற உணவாகிறது. இதில் லைசின் எனப்படும் அமினோ ஆசிட் அதிக அளவில் உள்ளது. கால்சியம், ஃபாஸ்ஃபரஸ்,மெக்னீசியம், பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி, சி அடங்கியது.

டென்னிஸ், டான்ஸ் போன்ற உடல் பயிற்சி அதிகம் உள்ள குழந்தைகளுக்கு தேவையான உடல் பலத்தை அளிக்கக் கூடிய ஒரு உணவு. அவசியம் சேர்க்க வேண்டிய ஒரு ஊட்டச் சத்து.

முளைகட்டிய பயறில் மருத்துவ குணங்கள் பல உள்ளன... காய்ச்சல், தலைவலி மற்றும் மன உளைச்சல் ஆகியவற்றுக்காக சீன மருத்துவத்தில் மருந்தாக உபயோகிக்கிறார்கள்.

இது இப்போதெல்லாம் எல்லா பெரிய நகரங்களிலும் Department Stores இல் விற்கிறது. சிறிய நகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டிலேயே செய்து கொள்ளலாம். பச்சைப் பருப்பு - பாசிப் பயறு என்றும் சொல்வார்கள். 

பச்சை பயறை ஒரு பிடி எடுத்து சில மணி நேரம் ஊற வைத்து, வடிகட்டிப் பின் ஒரு ஓட்டைப் பாத்திரம் அல்லது காய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்து விட்டால் மறு நாள் காலை முளை விட்டு இருக்கும். 

சிலர் துணியில் மூட்டை கட்டுவார்கள். சில சமயம் நாற்றமெடுக்கும். அதனால் காற்றுப் போகக் கூடிய பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் ப்ரெஷ்ஷாக இருக்கும். இதை ப்ரிஜ்ஜில் 4-5 நாட்கள் வரை கூட கெடாமல் வைத்திருக்கலாம்.

சர்க்கரைப் பொங்கல், பேரீச்சம் பழம், முளைக் கட்டிய பாசிப் பயறு  இயற்க்கை முறையில் ,ஆரோக்கியத்துடன் ,PALEO FOOD


நாங்கள் அன்றாடம் இயற்கையான மற்றும் தீங்கற்ற நல்லுணவுகளை சுவையாகவும் மலிவாகவும் விளைவித்தும் தயாரித்தும் உண்டு வாழ்கிறோம்! அதை முன்னுதாரணமாகக் கொண்டு மற்றவர்களும் உண்டு பயன்பெற்று நல்வாழ்வு வாழ விரும்புகிறோம். இது மிகப் பெரும் பட்டியலாக நீண்டுகொண்டே இருக்கும்.....




இயற்க்கை முறையில் எளிதாக தயாரித்து உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம் என்று செய்முறை விளக்கம் அளித்தSubash Krishnasamy ஐயா இதை உங்களுக்கு தயாரித்து கொடுத்த அம்மாவிற்க்கும் நன்றிகள் ஐயா.


Like Us Facebook

Categories

Unordered List

Sample Text

Blog Archive

Subscribe Via Email

Sign up for our newsletter, and well send you news and tutorials on web design, coding, business, and more! You'll also receive these great gifts:

Blog Archive

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Social Icons

Pages

BTemplates.com

Popular Posts

Popular Posts

Slider[Style1]

Find Us On Facebook

About us

Video Of Day

Popular Posts

Recent Posts

Text Widget